பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் வசிக்கும் 33 வயதான சார்லோட் போவர்ஸ் என்பவரது வீட்டில், சார்ஜ் போடப்படாத நிலையில் இருந்த மின்சார டூத்பிரஷ் திடீரென வெடித்துச் சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு மே மாதம் வாங்கப்பட்ட இந்த டூத்பிரஷ், எட்டு மாதங்களாக எவ்விதப் பிரச்சனையும் இன்றி இயங்கி வந்த நிலையில், ஒரு நாள் அதிகாலையில் திடீரென வெடித்து தீப்பிடித்தது.
மேலும் அதிர்ஷ்டவசமாக இருந்த கண்ணாடியின் எஃகு சட்டகம் தீ பரவாமல் தடுத்ததால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. தான் உயிர் பிழைத்ததே பெரிய அதிர்ஷ்டம் என்று கூறும் சார்லோட், இந்த விபத்தினால் ஏற்பட்ட புகையினால் தனது சுவர்கள் மற்றும் மின்விசிறி சேதமடைந்ததாகத் தெரிவித்தார்.
இந்த விபத்து குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் சார்லோட் முறையிட்டபோது, அவர்கள் வெறும் 46 டாலர்கள் அல்லது புதிய டூத்பிரஷ் வழங்குவதாகக் கூறியது அவருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சீரமைக்க தனக்கு சுமார் 267 டாலர்கள் செலவானதாகவும், நிறுவனம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனால் மின்சாரச் சாதனங்கள் சார்ஜ் செய்யப்படாத நிலையிலும் வெடிக்கக்கூடும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. இனிமேல் இதுபோன்ற மின்சார டூத்பிரஷ்களைப் பயன்படுத்தப் போவதில்லை என முடிவெடுத்துள்ள அவர், மற்றவர்களையும் இத்தகைய மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
