அப்ளை பண்ண வேண்டாம்…! இனி PF பணம் நேரடியாக வங்கி கணக்கிற்கு வரும்… மத்திய அரசின் சூப்பர் பிளான்…!!

By Devi Ramu on பங்குனி 23, 2026

Spread the love

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO), உரிமை கோரப்படாமல் நீண்ட காலமாக முடங்கிக்கிடக்கும் பிஎப் பணத்தை நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பும் ‘ஆட்டோ செட்டில்மென்ட்’ (Auto-settlement) முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. சுமார் 31.8 லட்சம் கணக்குகளில் முடங்கியுள்ள ரூ.10,181 கோடி தொகையை உரியவர்களிடம் சேர்க்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளைக் கொண்ட, ரூ.1,000-க்கும் குறைவான இருப்புத் தொகை உள்ள கணக்குகளுக்கு எவ்வித விண்ணப்பமும் இன்றி தானாகவே பணம் வந்து சேரும் வகையில் பைலட் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அடுத்தடுத்த கட்டங்களில் அதிக இருப்புத் தொகை கொண்ட சுமார் 8.1 லட்சம் கணக்குகளுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்பட உள்ளது. குறிப்பாக, ஏப்ரல் 2026-க்குள் பிஎப் பணத்தை யுபிஐ (UPI) வழியாகப் பெற்றுக்கொள்ளும் புதிய தொழில்நுட்ப வசதியையும் இபிஎப்ஓ உருவாக்கி வருகிறது. பயனாளர்கள் தங்களின் யுஏஎன் (UAN) எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும், வங்கி விவரங்கள் சரியாக உள்ளதா என்பதையும் உறுதி செய்து கொண்டால், பிஎப் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமலேயே தங்களின் சேமிப்புத் தொகையை எளிதாகப் பெற்றுக்கொள்ள முடியும்.