இரவோடு இரவாக கூண்டோடு ஐக்கியம்… அதிமுகவில் இணைந்த OPS ஆதரவாளர்கள்… விடிந்ததுமே செம ஷாக்…!

By Nanthini on பங்குனி 23, 2026

Spread the love

ஓபிஎஸ் அவர்கள் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதன் விளைவாக, தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் துணை மேயர் மணிகண்டன் மற்றும் வெள்ளூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மதியழகன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள், தங்களது தாய் கழகமான அதிமுகவிற்கே மீண்டும் திரும்பியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அவர்களை நேரில் சந்தித்து முறைப்படி கட்சியில் இணைந்தனர். தற்போதைய அரசியல் சூழலில் தனது விசுவாசமான ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் ஐக்கியமாகி வருவது, ஓபிஎஸ் தரப்பிற்கு பெரும் பின்னடைவாகவும் கவலையளிக்கும் விஷயமாகவும் மாறியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.