ICU-வில் மின்வெட்டு…. உயிருக்குப் போராடிய நோயாளிகள்.. கடலூரில் அதிர்ச்சி… என்ன நடந்தது?

By Devi Ramu on பங்குனி 22, 2026

Spread the love

கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று மாலை திடீரென மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தரைத்தளத்தில் சென்ற மின்சாரக் கம்பிகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனை இருளில் மூழ்கியது. குறிப்பாகத் தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் மின்சாரம் இல்லாததால், இதயம் மற்றும் சுவாசப் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் உயிருக்குப் போராடும் சூழலுக்குத் தள்ளப்பட்டனர்.

 

   

மின்சார வசதி இல்லாத நிலையிலும், நோயாளிகளின் பாதுகாப்பைக் கருதி செவிலியர்கள் தங்கள் செல்போன் டார்ச் மற்றும் அவசர கால விளக்குகளைப் பயன்படுத்திச் சிகிச்சையைத் தொடர்ந்தனர். இந்த அவல நிலை தொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊழியர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மின்கசிவைச் சரிசெய்த நிலையில், அரசு மருத்துவமனையில் நிலவிய இந்த அடிப்படை வசதிக் குறைபாடு நோயாளிகளின் உறவினர்களிடையே அச்சத்தையும் ஆத்திரத்தையும் கிளப்பியுள்ளது.