புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகுவதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட நீண்ட கால இழுபறி மற்றும் அதிருப்தி காரணமாக இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் முகமது அலி வெளியிட்ட அறிவிப்பில், வரவிருக்கும் தேர்தலில் வில்லியனூர், நெல்லித்தோப்பு, உருளையன்பேட்டை, உப்பளம், மாஹே, காரைக்கால் வடக்கு மற்றும் திருநள்ளாறு ஆகிய ஏழு தொகுதிகளில் ஐயுஎம்எல் தனித்துப் போட்டியிடும் எனத் தெரிவித்துள்ளார். இந்தத் திடீர் விலகல் புதுச்சேரி கூட்டணி அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், திமுக மற்றும் காங்கிரஸ் தரப்பிற்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
