திக் திக் காட்சி..! மரண பயத்தில் வாகன ஒட்டி… நள்ளிரவு 3 மணிக்கு வழிகாட்டிய மர்ம உருவம்.. கேமராவைச் சரிபார்த்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி..!!

By Soundarya on பங்குனி 19, 2026

Spread the love

அதிகாலை 3 மணி என்பது ஆன்மீக ரீதியாகவும், அமானுஷ்ய ரீதியாகவும் ஒரு மர்மமான நேரமாகக் கருதப்படுகிறது. அந்த நேரத்தில் தனிமையில் பயணம் செய்த ஒரு பைக் ஓட்டுநருக்கு (Byker) ஏற்பட்ட அனுபவம் தற்போது சமூக வலைதளங்களில் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. @_introvert_rv என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்தக் காணொளியில், அடர்ந்த இருளில் வழிதவறித் தவிக்கும் அந்த ஓட்டுநர், சாலையோரத்தில் நின்றிருந்த ஒரு மனிதரிடம் வழி கேட்கிறார். அந்த உருவமும் மிகச் சாதாரணமாக அவருக்குச் சைகை மூலம் வழிகாட்டுகிறது. ஆனால், அந்தப் பயணியின் கோப்ரோ (GoPro) கேமராவில் பதிவான காட்சிகள், அவர் வீட்டிற்குச் சென்று பார்த்தபோதுதான் உண்மை நிலையைத் தோலுரித்துக் காட்டின.

 

   
View this post on Instagram

 

A post shared by 𝓡𝓥 (@_introvert_rv)

தனக்கு வழிகாட்டிய அந்த மனிதருக்கு நன்றி கூறிவிட்டு, பைக் ஓட்டுநர் தனது வாகனத்தைத் திருப்பிய அடுத்த நொடியே, அந்த உருவம் காற்றில் கரைந்தது போல மாயமாக மறைந்துவிட்டது. இந்தத் திகிலூட்டும் மாற்றத்தைக் கேமரா துல்லியமாகப் பதிவு செய்துள்ளது. இதில் இன்னும் ஒரு அதிரவைக்கும் விஷயம் என்னவென்றால், அந்த மனிதருடன் ஓட்டுநர் பேசிக்கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் ஹெல்மெட் கண்ணாடியில் அந்த உருவத்தின் பிம்பம் (Reflection) துளிகூடத் தெரியவில்லை. இது ஒரு சாதாரண மனிதன் அல்ல, ஏதோ ஒரு புலப்படாத சக்தி என்பதை உறுதிப்படுத்துவது போல அமைந்திருந்தது, காண்போரின் முதுகெலும்பில் சில்லிப்பை ஏற்படுத்தியுள்ளது.

   

இந்தக் காணொளி வைரலானதைத் தொடர்ந்து இணையவாசிகள் இருவேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். “அனைத்து ஆவிகளும் தீயவை அல்ல; சில நேரங்களில் கடவுளே தேவதைகளை அனுப்பி வழிகாட்டுகிறார்” என்று ஒரு தரப்பினர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளனர். மற்றொரு தரப்பினரோ, இது நவீனத் தொழில்நுட்பத்தால் செய்யப்பட்ட தந்திரமாக இருக்கலாம் என்று சந்தேகம் கிளப்புகின்றனர். அதே சமயம், சிலர் நகைச்சுவையாக “இனிமேல் பேய்களிடம் வழி கேட்பதை விட்டுவிட்டு, கூகுள் மேப்ஸ் (Google Maps) பயன்படுத்துவதே உயிருக்கு உலை வைக்காத பாதுகாப்பான வழி” என்று கிண்டல் செய்துள்ளனர். எது எப்படியோ, இந்த 3 மணி நேர மர்மப் பயணம் இணையத்தில் ஒரு பெரிய விவாதத்தையே கிளப்பியுள்ளது.