அந்தக் குட்டிப் பெண் தனது காரில் அமர்ந்து கொண்டு, சாலையில் செல்லும் ஒரு நபரை “பாபு, பாபு” என்று அழைத்து, “ஹெல்மெட் போடுங்கண்ணா” என்று மழலை மொழியில் கூறுவது பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அது ஒரு ஆழமான உண்மையை நமக்கு உணர்த்துகிறது. “நான் பக்கத்தில்தானே செல்கிறேன்” என்று அந்த நபர் அலட்சியமாகப் பதில் கூறும்போது, அந்தச் சிறுமியின் முகத்தில் இருக்கும் கவலை, வளர்ந்தவர்கள் சாலை விதிகளை எவ்வளவு எளிதாகக் கடந்து செல்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
மேலும் விபத்துகள் தூரம் பார்த்து வருவதில்லை என்பதை அந்தப் பிஞ்சு உள்ளம் உணர்ந்த அளவிற்கு, அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் உணரத் தவறுவதுதான் வருத்தத்திற்குரிய விஷயம். இந்த வீடியோ வெறும் ரசனைக்காக மட்டுமல்ல, ஒவ்வொரு வாகன ஓட்டியும் சிந்திக்க வேண்டிய ஒரு எச்சரிக்கை மணி. “பக்கத்தில்தானே போகிறோம்” என்ற சின்ன அலட்சியம்தான் பல நேரங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசமும், காரில் செல்லும்போது இருக்கை பட்டையும் அணிவது மற்றவர்களுக்காக அல்ல, நமக்காகவும் நம்மை நம்பியிருக்கும் குடும்பத்தினருக்காகவும் என்பதை நாம் உணர வேண்டும். அந்தச் சிறுமி கற்பித்த இந்தப் பாடத்தை ஏற்று, ஒவ்வொரு முறை வாகனத்தை எடுக்கும்போதும் பாதுகாப்பை உறுதி செய்வோம்.
