நான் செய்த மிகப்பெரிய தவறு.. அதை செய்திருக்கவே கூடாது… முதன்முறையாக வருத்தம் தெரிவித்த OPS… அதிர்ச்சியில் EPS..!!

By Soundarya on பங்குனி 15, 2026

Spread the love

அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் (OPS), தான் செய்த மிகப்பெரிய தவறு எது என்பது குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். கடந்த காலங்களில் எடப்பாடி கே. பழனிசாமி (EPS) தலைமையிலான 4 ஆண்டு கால ஆட்சி தொடர்வதற்குத் தான் உறுதுணையாக இருந்ததே தனது வாழ்வின் பெரும் பிழை என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை தீர்மானத்தின் போது, தனது ஆதரவு 5 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு இபிஎஸ் அரசுக்கு ஆதரவு அளித்திருக்கக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு செய்திருக்காவிட்டால் அப்போதே ஆட்சி கவிழ்ந்திருக்கும் என்றும், அதன் மூலம் தற்போது நிலவும் அரசியல் குழப்பங்களைத் தவிர்த்திருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

   

மேலும், தென் தமிழக மக்கள் துரோகம் செய்தவர்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என இபிஎஸ்ஸை மறைமுகமாகச் சாடியுள்ளார். அரசியலில் துரோகியாகச் செயல்படும் அவரைத் தமிழக வாக்காளர்கள் வரும் தேர்தல்களில் அரசியலில் இருந்தே துடைத்து எறிவார்கள் என்றும் ஓபிஎஸ் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.