வீட்டு சிலிண்டர்.. இரவில் வந்த மகிழ்ச்சி அறிவிப்பு… காலையிலேயே இன்பதிர்ச்சி…!

By Nanthini on பங்குனி 14, 2026

Spread the love

மத்திய அரசு நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என்று திட்டவட்டமாக விளக்கம் அளித்த பின்னரும், மக்களிடையே நிலவும் பதற்றத்தின் காரணமாக எரிவாயு முன்பதிவு வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் சுமார் 75.7 லட்சம் சிலிண்டர்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது; இது வழக்கமான சராசரி அளவான 50 லட்சத்தை விட 30% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் பீதியடைந்து அவசரப்பட்டு முன்பதிவு செய்யத் தேவையில்லை என்றும், நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும் அமைச்சகம் நம்பிக்கை அளித்துள்ளது. விநியோகச் சங்கிலி சீராக இருப்பதால், மக்கள் வதந்திகளை நம்பாமல் இயல்பு நிலையில் இருக்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.