“கயிறு சரியா இருக்கா பொண்டாட்டி?” – மனைவியின் மரணத்தை சிரித்தபடி வீடியோ எடுத்த கொடூரக் கணவன்.. அதிர்ச்சியில் உறையவைக்கும் உண்மை….!

By Nanthini on பங்குனி 13, 2026

Spread the love

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், ராஜம்பேட்டையில் அரங்கேறியுள்ள ஒரு துயரச் சம்பவம், ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளது. ரவிசங்கர் என்பவருக்கும் லாவண்யா என்பவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரவிசங்கர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு, அவரைத் தொடர்ந்து உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சித்திரவதை செய்து வந்துள்ளார். இந்தத் தொடர் கொடுமைகளால் மனமுடைந்த லாவண்யா, தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து மின்விசிறியில் தூக்கிட முயன்றார்.

ஆனால், ஒரு கணவனாகத் தன் மனைவியைக் காப்பாற்ற வேண்டிய ரவிசங்கர், அதற்கு மாறாக அதிர்ச்சியூட்டும் வகையில் நடந்துகொண்டார். லாவண்யா தூக்கிட முயன்றபோது, பதற்றமடையாமல் தனது செல்போனை எடுத்த அவர், மனைவியின் மரணத்தை வீடியோ எடுக்கத் தொடங்கினார். மேலும், “கயிறு சரியாக இருக்கிறதா?” என்று கிண்டலாகக் கேட்டு, கொடூரமான முறையில் தனது மனைவியைத் தூண்டும் வகையில் பேசி, அந்தத் தற்கொலையை நேரடி ஒளிபரப்பு செய்வது போலப் பதிவு செய்துள்ளார்.

   

இந்தக் கொடூரத்தின் உச்சக்கட்டமாக, லாவண்யா உயிருக்குப் போராடியபோது, அங்கிருந்த தம்பதியரின் இரு பிஞ்சு குழந்தைகளும் இதை நேரில் கண்டு கதறி அழுதுள்ளனர். குழந்தைகளின் அழுகுரலைப் பற்றியும் கவலைப்படாமல், ரவிசங்கர் தொடர்ந்து வீடியோ எடுத்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. மனைவி இறந்த பிறகு, அந்த வீடியோ ஆதாரங்கள் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, இது தற்கொலை அல்ல, கணவனின் தூண்டுதலால் நடந்த கொலை என லாவண்யாவின் தந்தை புகார் அளித்துள்ளார்.

   

இந்தப் புகாரின் அடிப்படையில், ராஜம்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ரவிசங்கரை கைது செய்துள்ளனர். ஒரு மனித உயிர் தன் கண் முன்னே பிரிவதை வேடிக்கை பார்த்து, அதைப் பதிவு செய்த கணவனின் இச்செயல், மனிதநேயமற்ற தன்மையின் உச்சமாகப் பார்க்கப்படுகிறது. இந்த வீடியோ ஆதாரங்கள் ரவிசங்கருக்கு எதிரான வலுவான சாட்சியாக அமைந்துள்ள நிலையில், இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.