டெல்லியின் மையப்பகுதியான கன்னாட் பிளேஸில், முன்பின் தெரியாத ஒரு பெண்ணிடம் பொதுவெளியில் காதலை வெளிப்படுத்த முயன்ற இளைஞருக்கு நேர்ந்த கதி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுப்பதற்காகவோ அல்லது விளையாட்டுத்தனமாகவோ அந்த இளைஞர் கூட்ட நெரிசல் மிகுந்த அந்த இடத்தில் ஒரு பெண்ணிடம் சென்று ‘ப்ரொபோஸ்’ செய்துள்ளார்.
ஆனால், அந்தப் பெண் இதற்கு உடன்படாததோடு, இளைஞரின் இந்தச் செயல் அங்கிருந்த பொதுமக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அந்த இளைஞரைச் சூழ்ந்து கொண்டு சரமாரியாகத் தாக்கினர். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக இடத்திற்கு வந்து, அடி வாங்கிய இளைஞரை மீட்டு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
View this post on Instagram
“>
இந்த முழுச் சம்பவத்தையும் ராகவ் என்ற பயனர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது தற்போது வைரலாகி வருகிறது. “இந்தியாவில் இது போன்ற அந்நியர்களிடம் காதலை வெளிப்படுத்தும் கலாச்சாரம் வேலை செய்யாது, இது பெரும்பாலும் ஒருவிதமான துன்புறுத்தலாகவே பார்க்கப்படும்” என்று நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவிற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
