BREAKING: தமிழகத்தில் சிலிண்டர் தட்டுப்பாடு… காலையிலேயே அடுத்த அதிர்ச்சி….!

By Nanthini on பங்குனி 11, 2026

Spread the love

சென்னையில் நிலவும் சமையல் எரிவாயு (எல்.பி.ஜி) சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, ஹோட்டல்களில் இட்லி, தோசை போன்ற முக்கிய உணவு வகைகள் கிடைக்காது என்றும், சுமார் 90 சதவீத உணவு மெனுக்கள் குறைக்கப்படுவதாகவும் சென்னை ஹோட்டல்கள் சங்கத் தலைவர் ரவி அறிவித்திருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே உணவுப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் திணறி வரும் சூழலில், தற்போது தினசரி காலை உணவுகளுக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, குறிப்பாக வேலைக்காகத் தலைநகரை நம்பி வந்துள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வாதாரத்தை வெகுவாகப் பாதித்துள்ளது.

இந்த நெருக்கடி நிலை நீடித்தால், உணவகங்களின் இயக்கம் முடங்கி, சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கை முறை பெரும் சவாலைச் சந்திக்கும் என்பதில் ஐயமில்லை; எனவே, அரசு உடனடியாகத் தலையிட்டுத் தட்டுப்பாட்டைச் சரிசெய்து, ஹோட்டல்களுக்குத் தடையின்றி எரிவாயு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.