சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் பெண் ஒருவர் இந்திய ரசிகரிடம் “இந்தியா எங்கே இருக்கிறது?” என்று கேட்க, அதற்கு அந்த நபர் “இந்தியா ஃபைனலில் இறுதிப்போட்டியில் இருக்கிறது” என்று அதிரடியாகப் பதிலளிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டிக்கு முன்னதாகப் பகிரப்பட்ட இந்த வீடியோ, இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
மேலும் பாகிஸ்தான் பெண்ணை அந்த இளைஞர் நகைச்சுவையாகக் கிண்டல் செய்வது போல அமைந்த இந்தக் காட்சி, இணையத்தில் மிகப்பெரிய அளவில் டிரெண்டானது. இருப்பினும், ஆய்வுக்குப் பிறகு இந்த வீடியோ உண்மை அல்ல என்பதும், இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு போலி வீடியோ என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
View this post on Instagram
“>
இந்த வீடியோவை உன்னிப்பாகக் கவனித்தால், அதில் இருக்கும் மக்களின் முக பாவனைகள் மற்றும் மைதானத்தில் இருக்கும் ஒலிகள் இயற்கைக்கு மாறாக இருப்பதை உணர முடிகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியால் நிஜமான வீடியோ எது, ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ எது என்று கண்டறிவதில் உள்ள சவாலை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
