BREAKING: இது வேற லெவல்…. T20WorldCup வென்ற இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசு… பிசிசிஐ-யின் பிரம்மாண்ட அறிவிப்பு….!

By Nanthini on பங்குனி 10, 2026

Spread the love

டி20 உலகக் கோப்பையை மூன்றாவது முறையாக வென்று இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை வீழ்த்தி சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் மூலம் டி20 உலகக் கோப்பையை மூன்று முறை வென்ற முதல் அணி என்ற பெருமையையும், தொடர்ச்சியாக இரண்டு முறை கோப்பையை வென்ற அணி என்ற சாதனையையும் இந்தியா பெற்றுள்ளது.

இந்த அபார வெற்றியை கொண்டாடும் விதமாக, இந்திய அணிக்கு பிசிசிஐ (BCCI) பிரம்மாண்டமான பரிசுத்தொகையை அறிவித்துள்ளது. உலகக் கோப்பை வெற்றிக்குப் பரிசாக ரூ. 21.5 கோடி கிடைத்திருந்த நிலையில், தற்போது பிசிசிஐ சார்பில் இந்திய அணிக்கு ரூ. 131 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. வீரர்களின் இந்த வியக்கத்தக்க திறமையையும், உலக அரங்கில் இந்திய கிரிக்கெட் உயர்ந்துள்ளதையும் பாராட்டும் வகையில் பிசிசிஐ வழங்கியுள்ள இந்த மிகப்பெரிய பரிசுத்தொகை, விளையாட்டு உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.