கிண்டி தங்கம் கடத்தல் வழக்கில் செம ட்விஸ்ட்…! நண்பர்களுடன் சேர்ந்து முதலாளிக்கு விபூதி அடித்த ஊழியர்…. போலீஸ் அதிரடி…!!

By Devi Ramu on பங்குனி 10, 2026

Spread the love

சென்னையில் ஒன்றரை கிலோ தங்க நகைகளை கடத்தி சென்ற வழக்கில், அந்த நிறுவனத்தின் ஊழியரே தனது நண்பர்களுடன் சேர்ந்து திருடியது அம்பலமாகியுள்ளது. மும்பையிலிருந்து விமானம் மூலம் வந்த தங்க பார்சலைச் சவுக்கார்பேட்டைக்கு எடுத்து சென்ற போது, கிண்டி மேம்பாலத்தில் சிலர் தங்களை ஜிஎஸ்டி அதிகாரிகள் என்று கூறி மிரட்டி பறித்து சென்றுள்ளனர். உரிமையாளர் ராவல்சிங் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, அந்த நிறுவன ஊழியர் ஜிதேந்தர் குமார் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தொடர் விசாரணையில், ஜிதேந்தர் குமார் தனது பள்ளி நண்பன் தன்ராஜ் சர்மா மற்றும் சிலருடன் இணைந்து இந்தத் திட்டத்தைத் தீட்டியது தெரியவந்தது. ஜிஎஸ்டி அதிகாரிகள் போல நடித்துத் தங்கத்தை அபகரித்த கும்பல், நகைகளுடன் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளிகளை ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர். சக ஊழியரே விசுவாசமாக இருப்பது போல நடித்துப் பெரும் திருட்டில் ஈடுபட்டது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.