தமிழக அரசின் அடுத்த அறிவிப்பு…. ரூ.2,000 மகளிர் உரிமைத்தொகை.. வந்தாச்சு செம ஹேப்பி நியூஸ்….!

By Nanthini on பங்குனி 7, 2026

Spread the love

மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பெண்களுக்கு எதிரான தடைகளைத் தகர்த்து, அவர்களின் முன்னேற்றத்திற்காகத் திமுக அரசு தொடர்ந்து பாடுபட்டு வருவதை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.

குறிப்பாக, பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்’ முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டியதோடு, வரும் காலங்களில் இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி, திமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் மகளிர் உரிமைத் தொகையானது மாதம் ₹2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்ற உறுதியான வாக்குறுதியை மீண்டும் பதிவு செய்துள்ளார். மகளிரின் தன்னம்பிக்கையை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த அறிவிப்பு, அரசு பெண்களின் நலனில் கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்துவதுடன், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக இருப்பதையும் உணர்த்துகிறது.