கோவையில் கல்லூரி மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட மூவரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. சிவகங்கையைச் சேர்ந்த சதீஷ், கார்த்திக் மற்றும் தவசி ஆகிய மூன்று பேர் மீதும் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. தமிழகத்தையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில், தற்போது அவர்கள் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கானது மிக விரைவாக விசாரிக்கப்பட்டு, வெறும் 126 நாட்களிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளன. இந்தத் தீர்ப்பு சமூகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
