விவாகரத்து கேட்டால், வீட்டில் அனுமதிக்க மாட்டேன் என விஜய் மிரட்டினார்… புயலை கிளப்பிய சங்கீதாவின் புதிய மனு..!

By Soundarya on பங்குனி 7, 2026

Spread the love

நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஒரு புதிய இடைக்கால மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.  அதில் விவாகரத்து வழக்கு முடியும் வரை, சென்னை நீலாங்கரையில் உள்ள தனது கணவர் விஜய்யின் வீட்டில் வசிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என சங்கீதா கோரியுள்ளார்.

குடியுரிமை மற்றும் தங்குமிடம்: 

   

தான் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்று லண்டனில் வசித்து வருவதால், சென்னையில் தங்குவதற்கு தமக்கு எனத் தனியாக வீடு இல்லை என்றும், அதனால் நீலாங்கரை வீட்டில் தங்குவதே தமக்குச் சரியான வசதியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

   

அனுமதி மறுப்பு:

 

தற்போதைய சூழலில், தன்னை வீட்டிற்குள் அனுமதிக்க விஜய் மறுப்பதாகவும், இதற்கென விஜய்யின் வழக்கறிஞர் மூலம் தனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பராமரிப்புச் செலவு (Alimony): 

தனக்கும் தனது இரு குழந்தைகளுக்கும் முறையான பராமரிப்புச் செலவு மற்றும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விவாகரத்து விவகாரத்தில், ஒரு நடிகையுடனான விஜய்யின் நெருக்கம் மற்றும் மன உளைச்சல் காரணமாகவே தான் இந்த முடிவை எடுத்ததாக சங்கீதா தரப்பில் ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.