சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நெஞ்சை உருக்கும் ஒரு வீடியோவில், சிறுவன் ஒருவன் தனது தாயின் பிறந்தநாளுக்காக கம்மல் வாங்க கடைக்குச் செல்லும் காட்சி பலரையும் நெகிழச் செய்துள்ளது. ஆதிஸ்ரீ என்ற பெண் நடத்தி வரும் சிறிய ஆபரணக் கடைக்கு வந்த அந்த சிறுவன், அங்குள்ள கம்மல்களை மிகவும் ஆர்வத்துடன் பார்த்துள்ளான்.
மேலும் கடை உரிமையாளர் அதன் விலையை 40 ரூபாய் என்று கூறியதும், தனது பள்ளிப் பையைத் திறந்து அதிலிருந்த சில்லறை காசுகளை ஒவ்வொன்றாக எடுத்து எண்ணத் தொடங்கியுள்ளான். தனது தாய்க்கு ஒரு அழகான பரிசை அளிக்க வேண்டும் என்ற அந்தச் சிறுவனின் மழலை மாறாத முயற்சியைக் கண்ட கடை உரிமையாளர் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டார்.
View this post on Instagram
“>
அந்தச் சிறுவனின் அன்பைக் கண்டு நெகிழ்ந்த கடை உரிமையாளர், அவனிடம் இருந்த காசுகளைப் பெற்றுக்கொண்டு கம்மலை வழங்கியதுடன், “உன்னை மகனாகப் பெற்ற உன் தாய் மிகவும் அதிர்ஷ்டசாலி” என்று பாராட்டியுள்ளார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட சில நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலானது.
இந்நிலையில் “தாயின் மீதான அன்பிற்கு வயது ஒரு தடையல்ல” என்பதை இந்த நிகழ்வு உணர்த்துவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பணத்தை விட அந்தச் சிறுவனின் தூய்மையான அன்பே மிகப்பெரிய பரிசு என்று பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.
