சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், சில இளைஞர்கள் ஓடும் ரயிலின் மீது மாட்டுச் சாணத்தை எறியும் அருவருப்பான செயல் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே தண்டவாளத்திற்கு அருகில் நின்றுகொண்டு, அந்த இளைஞர்கள் அதிவேகமாகச் செல்லும் ரயிலின் பெட்டிகள் மற்றும் ஜன்னல்கள் மீது சிரித்துக்கொண்டே சாணத்தை வீசி எறிகின்றனர்.
இந்தச் செயலால் ஜன்னல் ஓரம் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுவது மட்டுமின்றி, பொதுச் சொத்துக்களும் சேதமடைகின்றன. இவர்களின் இந்த பொறுப்பற்ற செயலை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
क्या कहा जाए ऐसे लोगों को
इन पर कड़ी करवाई होनी चाहिए pic.twitter.com/DN7ihUADIz
— 🇮🇳Jitendra pratap singh🇮🇳 (@jpsin1) March 5, 2026
“>
இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் அந்த இளைஞர்கள் மீது கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஒருவேளை ரயிலின் ஜன்னல்கள் திறந்திருந்தால், உள்ளே இருக்கும் பயணிகள் மீது அந்த அசுத்தம் விழுந்து எவ்வளவு பெரிய சிரமத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர். “இதுபோன்ற விஷமத்தனமான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் ரயில்வே காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
