“அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல்?”… இஸ்ரேல் – ஈரான் மோதலில் ஆறாவது நாள் உச்சகட்ட பதற்றம்…!!!

By Rajeshwari on பங்குனி 5, 2026

Spread the love

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் ஆறாவது நாளை எட்டியுள்ள நிலையில், இரு தரப்பிலும் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஈரானின் ஏவுகணை உற்பத்தி மையங்கள் மற்றும் அணுசக்தி கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டன.

இது குறிப்பாக, தலைநகர் டெஹ்ரான் மற்றும் குவாம் நகரில் உள்ள முக்கிய கட்டிடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஈரானிய ரெட் கிரசண்ட் அமைப்பின் தகவல்படி, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 1,000-ஐ கடந்துள்ளதாகத் தெரிகிறது, இது கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

   

இதற்குப் பதிலடியாக, ஈரான் தனது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் வளைகுடா நாடுகளான பஹ்ரைன், குவைத் மற்றும் கத்தார் ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த மோதலில் 6 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளதை பென்டகன் உறுதிப்படுத்தியுள்ளது.

   

மேலும், சவுதி அரேபியா மற்றும் துபாயில் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு அருகிலும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால், அங்குள்ள அமெரிக்க அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினர் உடனடியாக வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த போர்ச் சூழல் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் மற்றும் சர்வதேச அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.