சென்னைக்கு காத்திருக்கிறதா பெட்ரோல் தட்டுப்பாடு?… ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கிய கப்பல்கள்… அதிர்ச்சி பின்னணி..!!!

By Rajeshwari on பங்குனி 5, 2026

Spread the love

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதன் விளைவாக, வளைகுடா நாடுகளில் இருந்து ஆசிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வரும் 700-க்கும் மேற்பட்ட கப்பல்கள் கடலிலேயே அணிவகுத்து நிற்கின்றன.

இதில் சென்னை துறைமுகத்திற்கு வரவேண்டிய இரண்டு பிரம்மாண்ட கச்சா எண்ணெய் கப்பல்களும் சிக்கியுள்ளதால், தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும், பாதுகாப்பு காரணங்களால் சென்னை உள்ளிட்ட 12 இந்திய துறைமுகங்களில் இருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கான சரக்கு போக்குவரத்து மற்றும் கன்டெய்னர் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

   

இருப்பினும், இந்தியாவில் அடுத்த 8 வாரங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் கையிருப்பில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தட்டுப்பாட்டைப் போக்க ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயைப் பெற இந்திய அரசு திட்டமிட்டு வருவதால், தற்போதைக்கு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் எண்ணம் இல்லை எனத் தெரிகிறது.