“யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்”…. எடப்பாடியின் திடீர் அறிவிப்பு…. மீண்டும் களமிறங்கும் அந்த ‘முக்கிய’ புள்ளி..!

By Nanthini on பங்குனி 5, 2026

Spread the love

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில், அதிமுக சார்பில் தம்பிதுரை மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். ஏற்கனவே ஐந்து முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ள தம்பிதுரைக்கு, இது ஆறாவது முறையாக நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

வரும் மார்ச் 16-ம் தேதி நடைபெறவுள்ள இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 5-ம் தேதியே கடைசி நாளாகும். தமிழகத்தில் திருச்சி சிவா, கனிமொழி சோமு உள்ளிட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதால் இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைப் அடிப்படையில் அதிமுக கூட்டணிக்கு இரண்டு இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

   

அதிமுக கூட்டணியில் தனக்கு வழங்கப்பட்ட இரண்டு இடங்களில், ஒரு இடத்தை பாமகவுக்கு ஒதுக்கீடு செய்ய எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். இதன்படி, ஒரு இடத்தில் தம்பிதுரை போட்டியிடும் நிலையில், மற்றொரு இடத்தில் பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் வேட்பாளராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைய அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.

   

மறுபுறம் திமுக கூட்டணியில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், தேமுதிக சார்பில் எல்.கே. சுதீஷ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள ஒரு இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவின் இந்த மூத்த அரசியல்வாதியான தம்பிதுரையின் தேர்வு, டெல்லி அரசியலில் கட்சியின் குரலை வலுவாக ஒலிக்கச் செய்யும் நோக்கில் எடுக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.