“இப்போது நான் சங்கீதாவை காதலிக்கிறேன்” இந்த பீல் ரொம்ப நல்லா இருக்கு… மனைவி குறித்து விஜய்யின் பழைய பேட்டி வைரல்…!!

By Soundarya on பங்குனி 4, 2026

Spread the love

சமீபத்தில் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. அந்த மனுவில், 2021-ம் ஆண்டு முதல் விஜய் மற்றொரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும், இது தனக்கு மிகுந்த மன உளைச்சலையும் அவமானத்தையும் ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் செய்தி காட்டுத்தீயாகப் பரவி வரும் வேளையில், சங்கீதாவைத் தனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று விஜய் முந்தைய பேட்டிகளில் நெகிழ்ச்சியுடன் பேசிய வீடியோக்கள் தற்போது மீண்டும் பகிரப்பட்டு வருகின்றன.

விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், சங்கீதாவை முதன்முதலில் பார்த்தபோதே அவருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. இது குறித்து விஜய்யிடம் அவர் கேட்டபோது, “சங்கீதா ஒரு நல்ல பெண்” என்று விஜய் சாதாரணமாகப் பதில் அளித்துள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக “அந்தப் பெண்ணையே நீ திருமணம் செய்து கொள்கிறாயா?” என்று தந்தை கேட்டது விஜய்க்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது பெற்றோர் இருவருக்குமே சங்கீதாவை மிகவும் பிடித்திருந்ததால், அவர்களது விருப்பத்திற்காகவே இந்தத் திருமணத்திற்கு விஜய் சம்மதம் தெரிவித்துள்ளார்.

   

இதனைத் தொடர்ந்து, லண்டனில் இரு வீட்டாரும் சந்தித்துப் பேசி மிகவும் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அந்தச் சமயத்தில் தனது தந்தை மீண்டும் ஒருமுறை “உனக்கு இந்தத் திருமணத்தில் முழுச் சம்மதமா?” என்று கேட்டதற்கு, “உங்க இஷ்டம்” என்று ஒரே வார்த்தையில் விஜய் பதிலளித்துள்ளார். பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட இந்தத் திருமணமானது, இரு குடும்பத்தாரின் பரஸ்பர சம்மதத்துடன் மிகச் சிறப்பாக உறுதி செய்யப்பட்டது.

   

திருமணம் உறுதியான பிறகுதான் சங்கீதா மீது தனக்குக் காதல் மலர்ந்ததாக அந்தப் பேட்டியில் விஜய் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். “கல்யாணம் முடிவான பிறகுதான் இப்போது நான் சங்கீதாவை காதலிக்கிறேன் என்ற உணர்வு எனக்கு வந்தது. அந்த உணர்வு மிகவும் அழகாக இருந்தது. அனைவரது வாழ்க்கையிலும் இத்தகைய காதல் வர வேண்டும்” என்று அவர் அப்போது பகிர்ந்திருந்தார். 27 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் வெளிப்படுத்திய இந்த அன்பான வார்த்தைகள், தற்போதைய சூழலில் அவரது ரசிகர்களிடையே ஒருவித நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.