“இதென்ன பரீட்சையா இல்ல வித்தைக்காட்சியா?”… கூரை மேல் ஏறி பிட் கொடுக்கும் இளைஞர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

By Rajeshwari on பங்குனி 3, 2026

Spread the love

மத்தியப்பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அரங்கேறியுள்ள முறைகேடுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. வைரலாகி வரும் வீடியோக்களில், பைராட் பகுதியில் உள்ள தேர்வு மையங்களின் கூரைகள் மீது ஏறி சில இளைஞர்கள் மாணவர்களுக்கு பிட் பேப்பர்களை வழங்குவதும், ஜன்னல் வழியாக விடைகளை உரக்கக் கத்திச் சொல்வதும் பதிவாகியுள்ளன.

இந்தச் சம்பவங்கள் மாநிலத்தின் கல்வித் தரம் மற்றும் தேர்வுக்கால பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளன. மற்றொரு அதிர்ச்சிகரமான புகாராக, ஒரு மாணவிக்கு பதிலாக வேறொருவர் தேர்வு எழுதச் சென்ற ஆள்மாறாட்டச் சம்பவமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

   

“>

   

இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வீடியோக்கள் குறித்து தங்களுக்கு இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கவில்லை என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், முறைகேடுகள் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் கல்வித் துறை உறுதி அளித்துள்ளது.