நோய்டா அமிட்டி சர்வதேசப் பள்ளியில் பயிலும் யுகேஜி (UKG) மாணவன் ஒருவன், பள்ளிப் பேருந்தில் தூங்கியதால் சுமார் 7 மணி நேரம் பேருந்திற்குள்ளேயே பூட்டி வைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. காலையில் தனது மகனைப் பேருந்தில் ஏற்றிவிட்ட தாய், மாலை பள்ளி முடிந்து நீண்ட நேரமாகியும் மகன் வீடு திரும்பாததைக் கண்டு பதற்றமடைந்து பள்ளிக்கு விரைந்தார். “நானே என் மகனைப் பேருந்தில் ஏற்றிவிட்டேன், அவன் எங்கே?” என்று கதறிய பெற்றோரின் கேள்வியால் பள்ளி நிர்வாகம் தேடுதல் வேட்டையில் இறங்கியது.
UKG student gets locked in Nodia Amity Int’l School bus for 7 hours after he falls asleep 😳
Parents reached school when he didn’t return home.
MOM: I personally put my son on the school bus. Where is he?
He was discovered 25 km away. Tragedy averted 🚨 pic.twitter.com/oFYOiEQVCJ
— News Algebra (@NewsAlgebraIND) February 27, 2026
சுமார் 7 மணி நேரத்திற்குப் பிறகு, அந்த மாணவன் பள்ளியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்திற்குள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அந்தச் சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டதால் ஒரு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பள்ளி நிர்வாகத்தின் இத்தகைய அலட்சியப்போக்கு மற்றும் பேருந்து உதவியாளரின் கவனக்குறைவு ஆகியவை குழந்தைகளின் பாதுகாப்பு குறித்துப் பெற்றோர்களிடையே பெரும் கவலையையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
