காசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக அதிர்ச்சி சிகிச்சை பிரிவில் இளம்பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது காதலை நிராகரித்த ஆத்திரத்தில் அண்டை வீட்டு இளைஞர் ஒருவர், அந்தப் பெண்ணை துப்பாக்கியால் சுட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்தப் பெண், மயக்கமடைவதற்கு முன்பாக தன்னைச் சுட்டவனின் பெயரை வாக்குமூலமாக அளித்துள்ளார்.
தற்போது அந்தப் பெண் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடி வருகின்றார். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட அண்டை வீட்டு இளைஞர் தலைமறைவாகியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவரைப் பிடிக்க வாரணாசி காவல்துறை தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.
SHOCKING: 18-yr-old bride Aarti Kumari shot in stomach during jaimala in Buxar, Bihar.
Shooter Neighbour, obsessed after rejection. She named him before collapsing. Critical on ventilator in Varanasi Trauma Centre. Accused absconding; manhunt on. pic.twitter.com/G013nI0snM
— Megh Updates 🚨™ (@MeghUpdates) February 25, 2026
“>
இந்நிலையில் ஒருதலைக் காதலால் ஏற்பட்ட இந்த வன்முறைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில், குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என்று உறுதி அளித்துள்ளனர்.
