இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், எளிமையின் அடையாளமுமான தோழர் நல்லகண்ணு அவர்களின் உடல்நிலை குறித்த கவலைக்குரிய தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மூச்சுத் திணறல் பாதிப்பு காரணமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மதியம் அவரது உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் வெளியாகியுள்ள இந்த செய்தி, தொண்டர்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடையே பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
