மத்திய அரசு வழங்கிய SC/ST சிறப்புத் திட்ட நிதியைத் தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்குப் பயன்படுத்தியதாகத் தேசியப் பட்டியல் சாதியினர் ஆணையத்தில் (NCSC) தலித் விடுதலை இயக்கம் புகார் அளித்துள்ளது. அதன் தலைவர் கருப்பையா அளித்துள்ள மனுவில், SC/ST சிறப்பு உட்கூறு நிதியைத் துணைத் தலைப்பின் கீழ் மடைமாற்றம் செய்துள்ளதாகவும், இது குறித்து ஆணையம் முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் தமிழக அரசுக்குப் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஏற்கனவே தமிழக அரசு இது குறித்து விளக்கம் அளித்திருந்தது. SC/ST நலனுக்கான நிதியிலிருந்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (KMUT) வழங்கப்படவில்லை என்று அரசுத் தரப்பில் முன்னரே தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த விவகாரம் மீண்டும் ஆணையத்திற்குச் சென்றுள்ளதால், விசாரணை முடிவுகள் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
