காலையிலேயே குடும்ப தலைவிகளுக்கு ஷாக்…. 90 லட்சம் பெண்களுக்கு இனி மகளிர் உரிமைத்தொகை கிடையாது… அரசு திடீர் அறிவிப்பு….!

By Nanthini on மாசி 22, 2026

Spread the love

மகாராஷ்டிராவில் பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்கும் ‘லட்கி பாஹின்’ (Ladki Bahin Yojana) திட்டத்தின் கீழ் பயன்பெற்று வந்த பயனாளிகளின் எண்ணிக்கையில் சுமார் 90 லட்சம் பெண்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். கடந்த 2024 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக 2.4 கோடியாக இருந்த பயனாளிகளின் எண்ணிக்கை, 2025 டிசம்பர் மாத நிலவரப்படி 1.57 கோடியாகக் குறைந்துள்ளது. தீவிரமான கள ஆய்வு, வங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் e-KYC நடைமுறையில் ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் தகுதியற்றவர்களைக் கண்டறியும் பணி ஆகிய காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசின் இந்த புதிய முடிவின்படி, ஏற்கனவே பிற அரசு நலத்திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெற்று வரும் பெண்களுக்கு, இந்தத் திட்டத்தின் முழுத் தொகையான 1,500 ரூபாய்க்குப் பதிலாக, அதில் ஒரு பகுதி குறைக்கப்பட்டு வெறும் 500 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் சமயத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற இத்திட்டத்தில், தற்போது இவ்வளவு பெரிய அளவில் பயனாளிகள் நீக்கப்பட்டிருப்பது அம்மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.