இப்போதெல்லாம் பெரும்பலான தமிழ் சினிமா முன்னணி நடிகர்கள் தமிழ்நாட்டில் இருப்பதை விட வெளிநாடுகளில் தான் அதிக நாட்களை செலவிடுகின்றனர். பல மாதங்களுக்கு அமெரிக்கா லண்டன் சிங்கப்பூர் மலேசியா தாய்லாந்து என வெளிநாடுகளில் தங்கி விடுகின்றனர். அந்த வரிசையில் நடிகர் சிம்பு பல மாதங்களாக வெளிநாட்டில்தான் இருந்து வருகிறார்.
அப்படி பல மாதங்களாக அவர் வெளிநாட்டில் என்ன செய்கிறார் என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது. அதாவது அவர் ஏஐ தொழில்நுட்பம் குறித்து படித்து வருகிறார். அதே போல் ஆன்லைன் வாயிலாக சில இயக்குனர்களிடம் அவர் கதை கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவில் பல மாதங்கள் தங்கி ஏஐ தொழில்நுட்பம் கற்றது போலவே சிம்புவும் ஏஐ தொழில்நுட்ப பயிற்சி பெறுகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
