உங்களுக்கு இன்னும் ரூ.5,000 வரவில்லையா?…. உடனே இதைச் செய்யுங்க…. முதலமைச்சர் கொடுத்த மெகா சர்ப்ரைஸ்….!

By Nanthini on மாசி 13, 2026

Spread the love

தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள சுமார் 1.31 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கி வருகிறது. இந்த நிலையில், வரவிருக்கும் தேர்தல் நடைமுறைகளைக் காரணம் காட்டி இந்தத் திட்டம் முடக்கப்படலாம் என்ற சூழலில், பயனாளிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கான உரிமைத் தொகையுடன் (ரூ. 3,000), கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2,000 ரூபாய் சேர்த்து மொத்தம் 5,000 ரூபாயை அரசு இன்று ஒரே தவணையாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளது.

தமிழக முதலமைச்சர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்துக் குறிப்பிடுகையில், மகளிருக்குத் தந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதில் பின்வாங்கப் போவதில்லை என்றும், தேர்தல் காரணங்களால் உரிமைத் தொகை தடைபடக் கூடாது என்பதற்காகவே இந்த முன்பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இன்று காலை 6:30 மணி முதலே பயனாளிகளின் செல்போன்களுக்குப் பணம் வரவு வைக்கப்பட்டதற்கான குறுஞ்செய்திகள் வரத் தொடங்கின. இந்தத் திடீர் வரவு இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், குழந்தைகளின் கல்விச் செலவு மற்றும் குடும்பத் தேவைகளுக்கு இது பெரிதும் உதவும் என அவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

   

இருப்பினும், ஏற்கனவே மாதந்தோறும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை பெற்று வரும் பயனாளிகளில் சிலருக்கு, தொழில்நுட்பக் காரணங்களாலோ அல்லது வேறு ஏதேனும் சிக்கல்களாலோ இந்த 5,000 ரூபாய் இன்னும் வங்கிக் கணக்கில் வந்து சேராமல் இருக்கலாம். அவ்வாறு பணம் கிடைக்கப் பெறாத தகுதியுள்ள பயனாளிகள் கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் இது தொடர்பாக உடனடியாக அந்தந்தப் பகுதியில் உள்ள வட்டாட்சியர் (Tahsildar) அலுவலகத்தை அணுகித் தகுந்த மனுவை அளிக்கலாம். இதன் மூலம் விடுபட்ட விவரங்களைச் சரிசெய்து பணத்தைப் பெற வழிவகை செய்யப்படும்.

   

நேரடியாக அலுவலகத்திற்குச் செல்ல இயலாதவர்கள், அரசின் அதிகாரப்பூர்வ புகார் இணையதளமான cmhelpline.tnega.org என்ற முகவரியில் தங்களது புகாரைப் பதிவு செய்யலாம். மேலும், முதலமைச்சர் வழங்கியுள்ள இந்த வாக்குறுதியின்படி, வரும் காலங்களில் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இந்த உரிமைத் தொகை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியுள்ள பயனாளிகள் தங்கள் வங்கி கணக்குகளைச் சரிபார்த்துவிட்டு, ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அரசு அறிவித்துள்ள முறையான வழிகளில் புகார் அளித்துத் தீர்வுகாண அறிவுறுத்தப்படுகிறார்கள்.