அதிமுகவில் அடுத்த விக்கெட் அவுட்…. கட்சித் தாவப்போகும் EPS-ன் தளபதிகள்… எடப்பாடிக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி வீசிய ‘அரசியல் குண்டு’…!

By Nanthini on மாசி 13, 2026

Spread the love

அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள் குறித்து திமுகவின் மூத்த நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ள கருத்துக்கள் தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கி வரும் அதிமுகவில், யாரெல்லாம் எப்போது கட்சியை விட்டு வெளியேறுவார்கள் என்ற அச்சத்தில் அவர் இருப்பதாக ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். குறிப்பாக, அதிமுகவின் வலுவான தூண்களாகக் கருதப்படும் எஸ்.பி. வேலுமணி மற்றும் தங்கமணி போன்ற முக்கியத் தலைவர்களே திமுகவில் இணைவதா அல்லது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதா என்று தீவிரமாக ஆலோசித்து வருவதாக அவர் ஒரு குண்டைப் போட்டுள்ளார்.

இந்த வெளியேற்றப் பட்டியலில் செங்கோட்டையன் மற்றும் அன்வர்ராஜா போன்ற மூத்த நிர்வாகிகளின் பெயர்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். செங்கோட்டையன் தவெக நோக்கியும், அன்வர்ராஜா திமுக நோக்கியும் நகர வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கைக்குரிய “தளபதிகள்” விரைவில் மாற்று முகாம்களுக்குச் செல்லவிருப்பது உறுதி எனத் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்னதாக அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் வெளியேறக்கூடும் என்ற இந்த அதிரடித் தகவல், அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது.