உத்தரப் பிரதேச மாநிலத்தில் தனது மனைவியை நண்பர்களுக்கு வெறும் 1,000 ரூபாய்க்கு விற்ற கணவனின் கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட 30 வயது பெண், தனது கணவர் சுட்டன் (Chuttan) தன்னை நண்பர்களுடன் அனுப்பி வைத்ததாகவும், அவர்கள் தன்னை ஒரு தைல மரத் தோப்பிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில், அவரது கணவரின் நண்பர்களான பால்கிஷன் மற்றும் பப்பு ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெண்ணிற்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், தலைமறைவாக உள்ள கணவன் சுட்டனைப் பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
