1000 முறை சத்தியம் செய்வேன்… ராஜா என்னுடைய பிள்ளை.. யாரோ ஒரு தாய் அறியாமல் செய்த தவறு… சாலமன் பாப்பையா உருக்கம்…!!

By Soundarya on மாசி 12, 2026

Spread the love

ராஜா குறித்து பரவி வரும் சர்ச்சையான கருத்துக்களுக்குப் பதில் அளிக்கும் வகையில், பட்டிமன்றப் பேச்சாளர் சாலமன் பாப்பையா தனது ஆழ்ந்த வருத்தத்தையும் ஆதரவையும் தெரிவித்துள்ளார். யாரோ ஒரு தாய் அறிந்தோ அறியாமலோ ராஜாவைப் பற்றி தவறான கணிப்பில் இச்செய்தியை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர்,  ராஜா கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது பண்ணையிலேயே இருப்பதாகவும், அவர் எப்படிப்பட்டவர் என்பது தனக்கு மிக நன்றாகத் தெரியும் என்றும் உருக்கமாகக் கூறியுள்ளார்.  ராஜாவைத் தனது சொந்தப் பிள்ளையாகவே கருதுவதாகக் குறிப்பிட்ட அவர், அவரைப் பற்றி இத்தகைய கருத்துக்கள் வெளிவந்தது தமக்கு மிகப்பெரிய மனவருத்தத்தைத் தருவதாகத் தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நேரத்தில் தான் அங்கு இல்லாததால் எதையும் உறுதிப்படுத்த முடியாது என்று தெரிவித்த சாலமன் பாப்பையா,  ராஜாவின் குணநலன்கள் குறித்து மிகுந்த நம்பிக்கையுடன் பேசியுள்ளார்.  ராஜாவின் மனதுக்குள் சாதிய உணர்வோ அல்லது அதுகுறித்த சிந்தனையோ துளியும் கிடையாது என்பதைத் தான் ஆயிரம் முறை சத்தியம் செய்து சொல்லத் தயாராக இருப்பதாக அவர் உறுதிபடக் கூறியுள்ளார். நீண்டகால நட்பின் அடிப்படையில்  ராஜாவின் தனிப்பட்ட பண்புகளை விளக்கியுள்ள பாப்பையாவின் இந்தப் பேச்சு, தற்போது சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.