பத்து ஆண்டுகளாகத் நடிகர் விஜய்யிடம் உண்மையாக வேலை பார்த்த ஒரு உதவியாளர், சாப்பாட்டில் சிறிய அளவில் முடி இருந்த காரணத்திற்காகத் தான் அனுபவித்த கொடுமைகளைப் பகிர்ந்துள்ளார். அந்த ஒரு சிறிய தவறுக்காகத் தன்னை நெஞ்சில் எட்டி உதைத்து, வீட்டை விட்டு வெளியேற்றியதாக அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இத்தனை கால உழைப்பைக்கூடப் பாராமல், இரக்கமின்றித் தன்னை வேலையை விட்டு நீக்கிவிட்டதால், தற்போது ஒருவேளை உணவிற்கே வழியில்லாமல் தவிப்பதாக அவர் வேதனைப்பட்டுள்ளார்.
சினிமா மற்றும் அரசியல் களத்தில் மக்கள் தலைவராக உருவெடுத்துள்ள ஒருவரின் நிழலில் இருந்தவருக்கு நேர்ந்த இந்த அவலம், பலரது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. நீண்ட கால விசுவாசத்தை ஒரு சிறு தவறுக்காக மறந்துவிட்டு, இவ்வளவு கடுமையான முறையில் ஒரு தொழிலாளியை நடத்தியது நியாயமா என்ற கேள்விகள் எழுகின்றன. இந்தப் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருவதால், தவெக மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
