தமிழ் சினிமாவில் டப்பிங் கலைஞராக இருப்பவர் ரவீனா ரவி. திரைப்பட நடிகையாகவும் உள்ளார். ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்தில் நடிகர் வித்தாத்துக்கு ஜோடியாக கதாநாயகியாக ரவீனா ரவி அறிமுகமானார். தொடர்ந்து வீரமே வாகை சூடும் லவ்டுடே மாமன்னன் உள்ளிட்ட பல படங்களில் ரவீனா ரவி நடித்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக தன்னையும் தனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் சில மர்ம நபர்கள் தொந்தரவு செய்வதாக ரவீனா ரவி புகார் தெரிவித்துள்ளார்.
சபரீஷ் என்பவரும் அவரது சகோதரர்களும் தொடர்ந்து தன்னையும் தனது குடும்பத்தினரையும் ஆன்லைனில் துன்புறுத்தி வருகிறார்கள். அருவருப்பான குறுஞ்செய்திகளை அனுப்புகிறார்கள். இது எங்களை பெரிய அளவில் பாதித்துள்ளது. இதுகுறித்து சட்டபூர்வ நடவடிக்கை எடுத்தும் அவர்கள் தொந்தரவு இன்னும் குறையவில்லை. மீண்டும் மீண்டும் புதிய சமூக வலைதள கணக்குகள் தொடங்கி எங்களை தொடர்பு கொண்டு வருகின்றனர்.
சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என்று சொல்லப்படும் நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள நடிகை ரவீனா ரவி, தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் சென்னை சைபர் கிரைம் போலீஸ்க்கும் இந்த புகாரை டேக் செய்துள்ளார். ஒரு நடிகையின் இந்த புகார் மனு இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
