கடல் கடந்து வந்த பாராட்டு… பத்மாவின் நேர்மைக்கு மலேசிய அமைச்சர் தங்க மோதிரம் அணிவித்து கௌரவம்…!!

By Soundarya on மாசி 6, 2026

Spread the love

சென்னை திருவல்லிக்கேணி, கிருஷ்ணாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் பத்மா, தி.நகரில் பணியில் இருந்தபோது கண்டெடுத்த 45 சவரன் நகையை (சுமார் ₹45 லட்சம் மதிப்பு) நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரது இந்தச் செயலைப் பாராட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ₹1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கிய நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அவரை நேரில் அழைத்து தங்கச் சங்கிலி அணிவித்து கௌரவித்தார்.

தற்போது, பத்மாவின் நேர்மை கடல் கடந்தும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. பத்மாவின் நேர்மையால் கவரப்பட்ட மலேசிய அரசின் சட்டத்துறை துணை அமைச்சர் குலசேகரன், தனது உதவியாளர் வடிவுக்கரசியைச் சென்னைக்கு அனுப்பி, பத்மாவுக்கு மோதிரம் அணிவித்து கௌரவம் செய்துள்ளார்.