சீட் கொடுக்காவிட்டால் கட்சி மாறுவேன்…? EPS-க்கு மிரட்டல் விடுத்த முக்கிய புள்ளி… அதிர்ச்சியில் அதிமுக..!!

By Soundarya on மாசி 6, 2026

Spread the love

மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட 25-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ள நிலையில், முன்னாள் மாவட்ட செயலாளரும் குத்தாலம் ஒன்றிய செயலாளருமான விஜிகே. செந்தில்நாதன் தனக்கு வாய்ப்பு கேட்டு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியனுக்கு கடும் அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. தனக்கு சீட் ஒதுக்கப்படாவிட்டால் கட்சி மாறப்போவதாக அவர் மிரட்டல் விடுப்பதாகவும், அதற்கு ஓ.எஸ். மணியன் அவரை சமாதானப்படுத்தி வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் கசிந்துள்ளன.

இருப்பினும், இந்த விவகாரம் குறித்து மயிலாடுதுறை அதிமுக தரப்பில் விசாரித்தபோது, கட்சி மாறுவதாகக் கூறப்படும் தகவல்களை அவர்கள் மறுத்துள்ளனர். ஓ.எஸ். மணியன் நாகை மாவட்ட செயலாளராக இருந்தாலும், மயிலாடுதுறைக்கும் அவரே பொறுப்பாளர் என்பதால் நிர்வாகிகள் கோரிக்கை வைப்பது இயல்பானது என்றும், செந்தில்நாதன் மிரட்டல் விடுத்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். கட்சித் தலைமை யாரை வேட்பாளராக அறிவித்தாலும், அந்த முடிவுக்கு கட்டுப்பட்டு அவரது வெற்றிக்கு உழைப்போம் என்பதே தொண்டர்களின் நிலைப்பாடாக உள்ளது.