உணவு விநியோகம் செய்யும் இளைஞர் ஒருவர், எதிர்பாராத விதமாக விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ (BMW) கார் மீது மோதியதில் சிறிய கீறல் ஏற்பட்டது. அந்தப் பாதிப்பைச் சரிசெய்ய சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவாகும் எனத் தெரிந்ததும், அந்த இளைஞர் அதிர்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதார். தன் வங்கிக் கணக்கில் மிகக் குறைந்த பணமே இருப்பதாகவும், தன் தாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறி அதற்கான ஆதாரங்களையும் அவர் காண்பித்தார்.
அந்த இளைஞரின் ஏழ்மையையும் தாயின் உடல்நிலையையும் கண்ட கார் உரிமையாளர், மனிதாபிமானத்துடன் அவரை மன்னித்து அனுப்பினார். காரைச் சரிசெய்யும் செலவைத் தானே ஏற்றுக் கொண்டதோடு மட்டுமல்லாமல், அந்த இளைஞருக்கு உதவுமாறு கோரி ஒரு வீடியோவையும் வெளியிட்டார். பணக்கார இதயமே உண்மையான செல்வம் என்பதை உணர்த்தும் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது இணையதளங்களில் வைரலாகிப் பலரது பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
ऑर्डर डिलीवरी के दौरान एक डिलीवरी बॉय से गलती से एक आदमी की BMW पर हल्का सा स्क्रैच लग गया।
कार मालिक ने बताया कि ठीक कराने में करीब 1–1.5 लाख रुपये लग सकते हैं और पूछा कि वह कितना दे पाएगा। यह सुनकर युवक रो पड़ा। उसने कहा कि उसके खाते में सिर्फ 3–4 हजार रुपये हैं और उसकी माँ… pic.twitter.com/5fyGYHKEtd
— Ocean Jain (@ocjain4) January 23, 2026
