காத்திருப்போர் பட்டியலா…? கவலை வேண்டாம்…! தட்கல் டிக்கெட் தானாக ரத்தனால் எவ்வளவு பணம் திரும்ப கிடைக்கும் தெரியுமா…?

By Devi Ramu on தை 22, 2026

Spread the love

ரயிலில் தட்கல் முறையில் முன்பதிவு செய்த டிக்கெட் உறுதியாகிவிட்டால், அதனை ரத்து செய்யும் போது ரயில்வே நிர்வாகம் ஒரு ரூபாய் கூட திருப்பித் தராது. முழுத் தொகையும் பிடித்துக் கொள்ளப்படும். ஆனால், உங்கள் டிக்கெட் காத்திருப்போர் பட்டியல்அல்லது ஆர்.ஏ.சி நிலையிலேயே நீடித்தால், ரத்து செய்யும் போது வெறும் 60 ரூபாய் மட்டுமே கட்டணமாக பிடிக்கப்பட்டு மீதமுள்ள தொகை உங்கள் வங்கிக் கணக்கிற்குத் திருப்பி அனுப்பப்படும். தானாக ரத்து செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கும் இதே விதிமுறை பொருந்தும் என்பதால், பயணிகள் பண இழப்பைத் தவிர்க்க இந்த வித்தியாசத்தைப் புரிந்து கொள்வது அவசியம்.

அதே சமயம், உறுதிப்படுத்தப்பட்ட தட்கல் டிக்கெட்டிற்கும் சில சூழல்களில் முழுப் பணத்தையும் திரும்பப் பெற முடியும். குறிப்பாக, நீங்கள் பயணிக்க வேண்டிய ரயில் புறப்படும் இடத்திலிருந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாகத் தாமதமானால், டி.டி.ஆர் தாக்கல் செய்து முழுத் தொகையையும் பெற்றுக் கொள்ளலாம். மேலும், நீங்கள் முன்பதிவு செய்த வகுப்பு கிடைக்காமல் குறைந்த தரம் கொண்ட வகுப்பில் பயணம் செய்ய நேரிட்டாலும் வித்தியாசத் தொகையைத் திரும்பக் கேட்கலாம். இத்தகைய புதிய ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) விதிமுறைகளைச் சரியாகப் பயன்படுத்தினால் தேவையற்ற நஷ்டங்களைத் தவிர்க்கலாம்.