BREAKING: “உதயநிதியை உடனடியாக பதவி நீக்கம் செய்க” பரபரப்பை கிளப்பிய பியூஸ் கோயல்.!!

By Soundarya on தை 22, 2026

Spread the love

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், திமுக அரசு மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கள் மக்களைப் பிளவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும், அவரது ‘வெறுப்புப் பேச்சு’ குறித்து உயர்நீதிமன்றமே கண்டனம் தெரிவித்துள்ளதை பியூஷ் கோயல் சுட்டிக்காட்டினார். எனவே, உதயநிதியை உடனடியாக அவரது பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று தெரிவித்த அவர், வரும் தேர்தலை முன்னிட்டு பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராகத் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார். மக்களின் உணர்வுகளுக்கு எதிராகச் செயல்படும் இந்த ஆட்சியை மக்கள் தூக்கி எறிய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பியூஷ் கோயலின் இந்த அதிரடிப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.