BREAKING: தமிழகம் முழுவதும் இன்று ஸ்டிரைக்…. ஸ்டாலினுக்கு அடுத்த ஷாக்…!

By Nanthini on தை 20, 2026

Spread the love

தமிழகத்தில் காலமுறை ஊதிய உயர்வு மற்றும் பணிக்கொடை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள் சங்கம் இன்று (ஜனவரி 20) முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. குறிப்பாக, திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 313-ஐ நிறைவேற்ற வேண்டும் என்பதும், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதும் இவர்களின் முதன்மையான கோரிக்கைகளாக உள்ளன. மாநிலம் முழுவதும் சுமார் 71,000 ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதால், பள்ளிகளில் சத்துணவு வழங்கும் பணி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இது தொடர்பாக அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் வெறும் “கண் துடைப்பு” என்று அதிருப்தி தெரிவித்துள்ள ஊழியர் சங்கத்தினர், தங்களின் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளனர். அரசு நிர்வாகம் தங்களை உரிய முறையில் கவனிப்பதில்லை என்றும், தேர்தல் வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த வேலைநிறுத்தப் போராட்ட அறிவிப்பு, தமிழக அரசுக்கு நிர்வாக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.