தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பு, இதுவரை சுமார் 90 சதவீத ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு நீள கரும்பு மற்றும் 3,000 ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை நாளை (திங்கட்கிழமை) முதல் அந்தந்த ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்பட உள்ளது.
பரிசுத் தொகுப்பைப் பெறாதவர்கள் தங்களது ரேஷன் கடைகளுக்குச் சென்று தடையின்றி பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட அறிவிப்பு வரும் வரை இந்த விநியோகப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று ரேஷன் கடை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
