BREAKING: திமுகவில் இணைந்த அதிமுகவின் முக்கிய புள்ளி… ஓபிஎஸ் அதிர்ச்சி…!

By Nanthini on தை 17, 2026

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் திமுக தனது கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் முயற்சியில் களமிறங்கியுள்ளது. என்னதான் தனது கூட்டணியை பலமாக வைத்திருந்தாலும் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியில் ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகின்றார். ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்று கட்சியினர் பலரும் திமுகவில் இணைந்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் பாஜகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் சமீப காலமாகவே திமுகவில் இணைந்து வருவதால் நாளுக்கு நாள் ஸ்டாலினுக்கு பலம் கூடிக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் அதிமுக முக்கிய முகங்களில் ஒருவராக வலம் வந்த வேதாரண்யம் PKV பிரபு உதயநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இவரது தாத்தா வெங்கடாசலம் காங்கிரஸில் EX MLA, மாநில துணை தலைவராக இருந்தவர். திமுகவில் இணைந்த பிரபு, அதிமுக(ஓபிஎஸ்  அணி) மாநில அமைப்புச் செயலாளராக இருந்தவர். மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் என அடுத்தடுத்து தனது ஆதரவாளர்கள் திமுகவில் இணைவது ஓபிஎஸ்-க்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.