சோகம்..! கே.எஸ்.அழகிரியின் மனைவி வத்சலா மரணம்.. CM ஸ்டாலின் இரங்கல்..!!

By Soundarya on தை 12, 2026

Spread the love
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் (TNCC) மூத்த தலைவரான கே.எஸ். அழகிரியின் மனைவி ஏ. வத்சலா (65) உடல்நலக் குறைவால் நேற்று (ஜனவரி 11) சென்னையில் காலமானார். அவரது மறைவு காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கும் வகையில், மனைவியை இழந்து வாடும் கே.எஸ். அழகிரிக்குத் தொலைபேசி வாயிலாக உருக்கமான இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், வத்சலாவின் மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தங்களையும் தெரிவித்து வருகின்றனர்.