தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மொத்தம் 234 தொகுதிகளில் 117 தொகுதிகளில் ஆண்களையும் 117 தொகுதிகளில் பெண்களையும் களம் இறக்க உள்ளதாக சீமான் அறிவித்துள்ளார். மேலும் 234 வேட்பாளர்களையும் ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தும் மாநாடு வருகின்ற பிப்ரவரி மாதம் திருச்சியில் நடைபெறும் எனவும் அவர் அறிவித்திருந்தார். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பழைய ஓய்வூதிய திட்டம் இதிச் சுமையை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தேர்தல் வரும்போது இதை அறிவித்திருப்பதால் இது ஒரு வாக்கு அறுவடை தான். இருந்தாலும் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி.
ஆட்சியில் பங்கு என்பதை விஜய் ஒரு கொள்கையாகவே வைத்திருக்கின்றார். காரைக்குடி தொகுதியில் நான் நிற்பது குறித்து பிப்ரவரி 21ஆம் தேதி அறிவிப்பேன். அந்த நாளில் திருச்சியில் நடக்கும் மாநாட்டில் அனைத்து வேட்பாளர்களையும் அறிவிப்போம். கூட்டணி என்பது எங்களுடைய கொள்கை கிடையாது. கூட்டணி இல்லாமல் வெற்றி பெற முடியாது என்பது பொய். ஜெயலலிதா மற்றும் கெஜ்ரிவால் ஆகியோர் தனித்து நின்று வெற்றி பெற்றுள்ளனர். மாற்றம் என்பது ஒரே நாளில் வந்து விடாது என சீமான் தெரிவித்துள்ளார்.
