திருப்பூர் வீரராகவ பெருமாள் கோயில் திருவிழாவின் போது, பாதுகாப்புப் பணியில் இருந்த தலைமைக் காவலரை இளைஞர் ஒருவர் கத்தியுடன் துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தாக்குதலில் இருந்து தப்பிக்க கொஞ்சம் தூரம் ஓடிய காவலர் தன்னுடைய இடுப்பில் இருந்த பெல்ட்டை கழற்றி அதன் மூலம் வாலிபர் கத்தியால் குத்தாமல் தற்காத்துக்கொண்டார். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலரை மிரட்டி அச்சுறுத்திய அந்த நபரை, மற்ற காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு மடக்கிப் பிடித்தனர்.
முதற்கட்ட விசாரணையில், பிடிபட்ட இளைஞர் மது போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த இளைஞர் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் திருவிழா காலத்தில் நடைபெற்ற இந்த மோதல் சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
