சொந்த ஊரிலேயே ஐடி வேலை…!! அனுபவம் தேவையில்லை…. எச்சிஎல் நிறுவனத்தில் குவியும் வாய்ப்புகள்…!!

By Devi Ramu on மார்கழி 29, 2025

Spread the love

மதுரை இளந்தைக்குளம் பகுதியில் உள்ள எல்காட் (ELCOT) ஐடி பூங்காவில் இயங்கி வரும் பிரபல எச்சிஎல் (HCL) நிறுவனம், புதிய பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ‘Process Associate’ மற்றும் ‘Customer Service Representative’ ஆகிய பணியிடங்களுக்கு 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் கலை மற்றும் வணிகவியல் (BBA, B. Com, MBA, MA, M. Com) படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அனுபவம் இல்லாத பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கும் மதுரை இளைஞர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்துள்ளது.

விண்ணப்பதாரர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் திறனும், இரவு நேரப் பணிகளில் ஈடுபடும் ஆர்வமும் இருப்பது அவசியமாகும். பி.இ மற்றும் பி.டெக் போன்ற தொழில்நுட்பப் பட்டதாரிகளாக இருந்தால், ஒரு வருடப் பணி அனுபவம் உடையவர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம். தகுதியான நபர்களுக்குத் துறை சார்ந்த சிறந்த ஊதியம் வழங்கப்படும் என நிறுவனம் உறுதி அளித்துள்ளது. சொந்த ஊரிலேயே தங்கி முன்னணி ஐடி நிறுவனத்தில் பணியாற்ற விரும்பும் பட்டதாரிகள், எச்சிஎல் இணையதளம் வழியாகத் தங்களின் விவரங்களைச் சமர்ப்பித்து இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.