திமுகவில் அடுத்த பரபரப்பு..! “ரூ.4,700 கோடி முறைகேடு” K.N நேருவை தொடர்ந்து துரைமுருகனுக்கு புதிய சிக்கல்

By Soundarya on மார்கழி 27, 2025

Spread the love

தமிழகத்தில் ஒரு யூனிட் மணல் சுமார் ₹20,000 வரை விற்கப்படுவதாகவும், இதன் மூலம் ₹4,700 கோடி அளவிற்குச் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாகவும் குற்றம்சாட்டி அதிமுக சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) மற்றும் டிஜிபி-யிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அமைச்சர் கே.என். நேருவின் கட்டுப்பாட்டில் உள்ள துறையில் பணி நியமன முறைகேடுகள் வாயிலாக ₹1,020 கோடி பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை (ED) குற்றம்சாட்டியுள்ள நிலையில், தற்போது அமைச்சர் துரைமுருகன் மீதான இந்தப் புகார் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணல் கொள்ளை மற்றும் அரசுத் துறை முறைகேடுகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சியான அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.